காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தோல்வி
மலேசிய விமானம் காணாமற் சென்று இன்றுடன் 2 வாரங்களான நிலையில் அதனை தேடும் நடவடிக்கைகள் தோல்விகளையே சந்திக்கின்றது.
காணாமல் போன மலேஷிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு பாகங்களை கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.
இதனையடுத்து , இந்து சமுத்திரத்தில் இந்த துகள்களைத் தேடும் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
முதல் நாள் தேடும் பணிகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் இந்த பணிகள் மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் சீனா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் விமானங்களும் இன்று இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment