உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

கொத்மலை நியாங்கந்தர சொய்சா தோட்டத்தில் தீ

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நியாங்கந்தர சொய்சா தோட்டத்தில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த ஒரு தனியார் தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
தொழிற்சாலைக்கு அருகில் பரவிய தீ தேயிலை தொழிற்சாலைக்கும் பரவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
தீயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களும் கொத்மலை பொலிஸாரும் முயற்சி செய்து வந்தபோதும் அதை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பின் உதவியோடு கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். 
 
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: